கன்னியாகுமரி, ஜன. 12 –
மயிலாடியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது. இதற்கு அகத்தீஸ்வரர் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கம் நடேசன் தலைமை தாங்கினார்.
மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன், மாவட்ட செயல் தலைவர் மயிலை மகாலிங்கம், வட்டார பொருளாளர் நாகராஜன், வட்டார துணைத் தலைவர் ஜாண்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கேடி உதயம் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்வில் அழகப்பபுரம் நகர காங்.பொறுப்பாளர் கிங்ஸ்டன் ஜெயசிங், வட்டார அமைப்பு பொதுச் செயலாளர் ஏசுதாசன், நல்லூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் மோசஸ், இரவிபுதூர், ஐயப்பன், அந்தோணி முத்து, மணி, பிரேமா, ராஜா, பெரியசாமி வட்டாரத் தலைவர் முருகானந்தம், சாரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



