மதுரை, ஜூன் 25 –
மதுரை மாவட்ட மருத்துவ சங்க அமைப்புகள் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட நிர்வாகமும் இணைந்து போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா துவக்கி வைத்தார்.
மருத்துவ சங்க அமைப்புகள் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய போதை ஒழிப்பு தின பேரணி மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் இணைந்து 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ரேஸ் கோர்ஸ் விளையாட்டு திடல் சென்றடைந்தனர்.



