திருச்சி, மே 7 –
மணப்பாறை அருகே கே. உடையப்பட்டி கிராமத்தில் ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் முத்துசாமி அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் சடலமாக மிதந்த நிலையில், அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை தீயணைப்புத் துறையினர், உடலை மீட்டெடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



