திருப்பெரும்புதூர், செப். 3 –
திருப்பெரும்புதூர் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் அமுதன் தலைமையில் நடைபெற்றது. மகளிர் உரிமைத் தொகை, ஆதார் கார்டு, குடும்ப அட்டை, மின் இணைப்பு, பெயர் மாற்றம், முதியார் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் கொடுத்த மனுக்களை அதிகாரிகள் பெற்று பரிசீலனை செய்தனர்.
உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரன் மற்றும் தலைவர் தமிழ் அமுதன், துணைத்தலைவர் ரவி சான்றிதழ்களை வழங்கினார்கள். உடன் காவல் உதவி ஆணையர் சுந்தர், ஆய்வாளர் டெல்லி பாபு, உதவி ஆய்வாளர்கள் முருகன், பொன்னுரங்கம், ராமலிங்கம் உள்ளிட்ட காவல்துறை மற்றும் மின்சார துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



