புதுக்கடை, பிப். 27 –
புதுக்கடை அருகே உள்ள கைசூண்டி பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் பொன்னப்பன் (40). இவரது அண்ணன் செந்தில் குமார் (42). இருவரும் கட்டிட வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கநாடார் (68), அவரது மகன் வினு (41) ஆகியோருக்கும் இடையே குடும்பக் கோவில் நடத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவ தினம் செந்தில்குமார் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தங்கநாடார் மற்றும் வினு ஆகியோர் சேர்ந்து கெட்ட வார்த்தைகள் பேசி தகராறு செய்துள்ளனர். அப்போது இதை செந்தில்குமார் தட்டிக் கேட்டார்.
உடனடியாக தங்க நாடாரும், வினுவும் கையில் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தியால் அண்ணன் தம்பியான பொன்னப்பன், செந்தில்குமார் ஆகிய இருவரையும் வெட்டியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தங்க நாடார், வினு ஆகியோரை தேடி வருகிறார்கள்.


