ஈரோடு, அக். 2 –
ஈரோட்டை அடுத்த புங்கம்பாடி ஊராட்சி சார்பில் ஈரோடு மேட்டுக்கடையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, எரி சக்தி, மாற்று திறனாளிகள், நல வாரியம், ஆதி திராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்பட 17 துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் கலைஞர் உரிமைத் தொகை கேட்டு ஏராளமான பெண்கள் மனு கொடுத்தனர். மேலும் பல்வேறு துறைகளிலும் பொது மக்கள் தங்கள் கோரிக்கைக்காக மனு கொடுத்தனர்.
இதில் வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு முகாமில் கோரிக்கை மனு அளித்த மனுதாரரின் மனுவின் மீது உடனடி தீர்வாக நலத்திட்ட உதவியினை வழங்கினார். இதில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், சென்னிமலை பி டி ஓ பால முருகன் மற்றும் புங்கம்பாடி ஊராட்சி செயலர் தங்க முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.



