திருப்பூர், ஆக. 16 –
இந்திய நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூரில் தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சேர்மன் முனைவர் ஏ. ரபீக் ஆலோசனைபடி தேசிய பொதுச்செயலாளர் சேவாரத்னா முனைவர் விஜயலட்சுமி, தமிழ்மாநில TM சதாசிவம் ஒப்புதலோடு திருப்பூர் மாவட்ட, மாநில ஒருங்கிணைப்பாளர் அசரஃப் அலி தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினர். விழாவில் தமிழ் மாநிலச் செயலாளர் குணசேகர் மற்றும் திருப்பூர் மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட துணைத் தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மாநில இளைஞரணி செயலாளர் கோபால், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ், மேற்கு மண்டல தலைவர் செல்வராஜ், மேற்கு மண்டல செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இணை ஒருங்கிணைப்பாளர் கே. சித்ரா, மாநில மகளிர் அணி ஆலோசகர் ரேடியன் கிருஷ்ணா, மாநில மகளிர் அணி துணைத்தலைவர் உஷா, கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் உமைபா, கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சம்லா, கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ருக்கியா கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் மும்தாஜ், கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி உறுப்பினர் செனீமா அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
மேலும் விழாவில் திருப்பூர் மாவட்ட மாணவரணி தலைவர் ஈஸ்வர ராகுல், துணை தலைவர் இளங்கோ மற்றும் பல்லடம் தொகுதி செயலாளர் மைதீன் பாபா
உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.



