ஈரோடு, ஜூலை 18 –
ஈரோடு பெருந்துறை ரோடு வீரப்பம் பாளையத்தில் ஆகாஷ் கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இந்த மையத்தில் நிகில் சிவானந்தம் என்ற மாணவர் நீட் தேர்வுக்கு படித்து வந்தார். இவர் தகுதி மற்றும் நுழைவு தேர்வில் (நீட் யூஜி) 720 க்கு 691 மதிப்பெண் பெற்று அகில இந்திய தர வரிசை 92ஐ பெற்று ஈரோடு அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளார்.
இந்த ஆண்டு ஆகாஷ் மாணவர்கள் பெரிதும் விரும்பும் முதல் தர வரிசைகளை பெற்று உள்ளனர். நாடு தழுவிய அளவில் முதல் 10 இடங்களுக்குள் 4 மாணவர்களும் முதல் 50 இடங்களுக்குள் 18 மாணவர்களும் முதல் 100 இடங்களுக்குள் 41 மாணவர்களும் இடம் பிடித்து உள்ளனர்.
இது பற்றி மாணவன் நிகில் சிவானந்தம் கூறும் போது: அகில இந்திய அளவில் 92 வது இடத்தை பிடித்ததின் மூலம் எனது கனவு நனவாகி உள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினார். இது பற்றி ஆகாஷ் நிறுவனத்தின் தமிழ்நாடு ரீஜினல் விற்பனை தலைமை அதிகாரி பிரதீப் உன்னிகிருஷ்ணன். முதன்மை உதவி இயக்குநர் ராகவேந்திரா ஆகியோர் தெரிவித்தனர். இதில் ஈரோடு மேலாளர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



