மார்த்தாண்டம், ஆக. 16 –
தமிழக வாழ்வுரிமை கட்சியின் குமரி மேற்கு மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நித்திரவிளையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரனேஷ்குமார் தலைமை தாங்கினார். குமரி மேற்கு மாவட்டத்தின் தலைவர் பென்னட் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் தமிழக வேலை தமிழருக்கே என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் வரும் 19-ம் தேதி சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடக்கவிருக்கும் போராட்டத்தில் குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து 200 நபர் கலந்துகொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.



