நாகர்கோவில், மே 11 –
நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா வேப்பமூடு சந்திப்பு பகுதியில் உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் தினமும் ஏராளமானவர்கள் இந்த பூங்காவில் வந்து செல்வது வழக்கம். இங்கு கோளரங்கம், சிறுவர்களுக்கானவிளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் இளம் ஜோடிகள் வருகை அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரும், அவருடன் இளம் பெண் ஒருவரும் அங்கு வந்திருந்தனர். இருவரும் முறையாக டிக்கெட் பெற்று சிறிது நேரம் பூங்காவில் கை கோர்த்தபடி வலம் வந்தனர். இதை தொடர்ந்து அங்குள்ள ஒரு இருக்கையில் ஒன்றாக அருகருகே நெருக்கமாக அமர்ந்திருந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென இருவரும் திடீரென மாறி மாறி கடுமையாக திட்டிக் கொண்டனர். தொடர்ந்து இருவருக்கும் கை கலப்பு ஏற்பட்டு, மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கினர். மேலும் இளம்பண்ணை வாலிபர் கடுமையாக திட்டினார். அந்த பெண் அழுதவாறு அந்த வாலிபரை திட்டினார்.
இதை பார்த்த பூங்காவில் இருந்த தூய்மை பணியாளர்கள் ஓடி வந்து இருவரையும் சமாதான செய்தனர். பின்னர் இருவரும் எதுவும் பேசாமல் அங்கிருந்து தனித்தனியாக நடந்து சென்றனர். இந்த சம்பவத்தை பூங்காவில் சிறுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


