நாகர்கோவில், செப்டம்பர் 5 –
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி முதுகுத்தண்டு வட பாதிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதன்படி இன்று நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்கா அருகே முதுகு தண்டுவட பாதிப்பு தினத்தை ஒட்டி விபத்து மற்றும் பல்வேறு நிகழ்வுகளால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர். விபத்து தவிர்க்க தலை கவசம் அணிந்து பைக் ஓட்ட வேண்டும், அதிவேகம் ஆபத்தானது, குடிபோதையில் வாகனம் ஒட்டாதீர்கள், தண்டுவட பாதிப்பு வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய அவஸ்தையை ஏற்படுத்தும் எனக்கூறி பிரசாரம் செய்தனர்.


