கிருஷ்ணகிரி, ஜூலை 4 –
தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.சீனிவாசனின் 50வது பிறந்தநாள் விழா இன்று கிருஷ்ணகிரியில் தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் ஜி.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
சிறப்பாக நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவின், முதல் நிகழ்ச்சியாக கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள முதியோர் இல்லத்தில், ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. அங்கிருந்த பிஷப் டேனியல் சக்கரவர்த்தி இயேசுவின் பைபிளில் சில வாசகங்களை வாசித்து சிறப்புரையாற்றி மாநிலத் தலைவரை வாழ்த்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த பழங்குடியினர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் மிகவும் பிரசித்தி பெற்ற காட்டுவீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகத்துடன் பூஜைகளுடன் அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்து பிறந்தநாள் விழாவை தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கிருஷ்ணகிரி நிர்வாகிகள் கொண்டாடினார்கள். இறுதியாக மாநிலத் தலைவர் சீனிவாசன் விழா ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில், தேசிய மக்கள் கட்சியின் விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் எஸ்.சரவணன், மாவட்டத் துணைத் தலைவர் பத்மா, திமுக கிளைச் செயலாளர் அண்ணாதுரை, தேசிய மக்கள் கட்சி இளைஞர் அணி நகர தலைவர் அப்சல் ஆகியோர் கலந்து கொண்டனர்.



