தென்காசி, ஏப்ரல் 21 –
தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று பொது மக்களிடம் இறுதிக்கட்ட வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொது மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதற்கு கடைசி நாளான இன்று தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பேரணியாக தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி தென்காசி நகர முக்கிய பகுதிகளில் சென்று தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி இறுதி கட்ட தீவிர பிரச்சாரம் செய்தார்.
அப்போது பொதுமக்களிடம் அவர் அளித்த வாக்குறுதிகள்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். தென்காசியில் மினி டைடல் பார்க், குற்றாலத்தை உலக தரத்தில் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும். தரமான சாலைகள் போட்டு தரப்படும். குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள் மாற்றி அமைத்தல், இரட்டை குளம் ஜம்பு நதி கால்வாய் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்.
பெருந்தலைவர் காமராஜர் பெயரில் நூலகம், சுரண்டை பகுதியில் கல்லூரி ,வருடத்தில் 365 நாட்களும் மக்கள் குறை கேட்கப்பட்டு சரி செய்ய முயற்சிக்கப்படும் என்று பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார். இறுதியாக பொதுமக்கள் அனைவரும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இருசக்கர வாகன பேரணியுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தென்காசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவனுடன் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



