தஞ்சாவூர், ஜூன் 22 –
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ‘தஞ்சை தூய்மை’ இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்ததாவது: பாரம்பரிய நகரமாகும் கலாச்சார நகரமாகும் விளங்கும் தஞ்சாவூர் மாநகரப் பகுதியில் தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் மாநகராட்சியும்இணைந்து தூய்மை தஞ்சை சுகாதார இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாநகராட்சி உட்பட்ட சாலைகள், ரவுண்டானாக்கள், பூங்காக்கள், உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் தூய்மையாகவும், அழகாகவும், விளங்கும் வகையில் பொது இடங்களான சாலைகள், மற்றும் சென்டர் மீடியன் ஆகிய பகுதிகளில் பசுமை மை பாதுக்காக்கும் வகையில் புதிதாக மரக்கன்றுகள் வைத்தல் ஏற்கனவே உள்ள மரம் செடிகொடிகளை புனரமைத்து அழகுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பாரம்பரிய நகரமாகவும் கலாச்சார நகரமாகும் விளங்கும் தஞ்சாவூர் மாநகரப் பகுதியில் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தஞ்சாவூர் மாநகராட்சி இணைந்து தூய்மை தஞ்சை சுகதார இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் தஞ்சாவூருக்கு வருகை தரும் வெளிநாட்டினர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மிக்க தஞ்சாவூர் பகுதியை காண வருகை தரும் போது பசுமை நிறைந்த தஞ்சையையும் அவர்களு க்கு காட்சிக்கு விருந்தளிக்கும் வகையில் சிறப்பாக அமைக்கப்படவுள்ளது என மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் தீபனா விஸ்வேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் நித்யா, வட்டாட்சியர் சிவகுமார், மாநகர் நல அலுவலர் வீராசாமி, மாநகராட்சி பொறியாளர்கள் மோகன், மனோகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



