திருவெண்ணெய்நல்லூர், ஆகஸ்ட் 14 –
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தடுத்தாட்கொண்டூர், கீரிமேடு, மழையம்பட்டு ஆகிய கிராமங்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ. மணிக்கண்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மகளிர் உரிமை தொகை, பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த மனுக்களை பெற்று கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கண்காணிப்பாளர் துணை ஆட்சியர் சுந்தர்ராஜன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர்கள் பி.வி.ஆர். விசுவநாதன், சந்திரசேகரன், துணை சேர்மன் கோமதி நிர்மல்ராஜ், பி.டி.ஓ முல்லை பாலசுப்பிரமணியன் அரசு வட்டாட்சியர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் வீராசாமி, ஸ்ரீதர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிர்மல்ராஜ், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



