திருப்பூர், செப். 20 –
எஸ். பி. ஐ. வங்கி எதிரில் தாழியில் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் தமிழகத்தின் நான்காவது கிளையாக திறக்கப்பட்டது. இங்கு பொது மக்களுக்கு தாழியில் கிடைக்கப்பெறும் 1.20/வட்டி விகிதத்தில் நகைகளை அடமானம் வைத்து சலுகைகளை பெற்றுக் கொள்ளுமாறு நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. இந்நிறுவனம் கோவை மாவட்டத்தில் துவங்கி பொதுமக்களின் ஆதரவு பெற்று பெங்களூர் கர்நாடகா, கேரளா, போன்ற மாநிலங்களில் பகுதிகளில் துவங்க உள்ளது.
இதேபோன்று திருப்பூர் மாவட்டம் மாநகரங்களில் பி.என்.ரோடு, அவிநாசி ரோடு,
பல்லடம் ரோடு, காங்கேயம் ரோடு பகுதிகளில் கிளைகள் துவங்கப்பட உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிறுவனத்தின் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு மருத்துவ வசதிகள், அவர்களின்
குடும்பத்திற்கு உண்டான இன்சூரன்ஸ் வசதிகள் நிறுவனத்தின் சார்பில் செய்து தரப்படும் என்று நிறுவனத் தலைவர் கூறினார். திருப்பூரில் நடைபெற்ற கிளை
திறப்பு விழாவில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு திரையரங்கம் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கம் சுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அமித் ஐ.ஏ.எஸ், ஸ்ரீமதி, லதா சுரேஷ்குமார், நிறுவன தலைவர் தாமஸ் ஜான், ஜெனாய் ஜான், கார்த்திக் சுந்தரபாண்டியன் தலைமை இயக்குனர் அதிகாரி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.



