திருச்சி, ஏப்ரல் 22 –
திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மேற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்படுகின்றன. இந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.



