திருச்சி, ஏப். 24 –
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேற்று நடந்ததை ஒட்டி, சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் மீண்டும் பணி செய்யும் இடங்களுக்குத் திரும்பியதால் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இன்றி நீண்ட நேரம் காத்திருந்தனர். குறிப்பாக, புதுக்கோட்டை பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.



