By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தினதமிழ் செய்தி எதிரொலி: குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்: பொதுமக்கள் நலன் கருதி (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா நடவடிக்கை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தினதமிழ் செய்தி எதிரொலி: குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்: பொதுமக்கள் நலன் கருதி (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா நடவடிக்கை!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தினதமிழ் செய்தி எதிரொலி: குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்: பொதுமக்கள் நலன் கருதி (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா நடவடிக்கை!

Last updated: May 28, 2026 5:51 pm
May 28, 2026
39 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 28 –

தினதமிழ் செய்தி எதிரொலியாக குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டது. பொதுமக்கள் நலன் கருதி (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா நடவடிக்கை!

நாகர்கோவில் மாநகராட்சி 6வது வார்டு பள்ளிவிளை, சானல்கரை சாலை என்பது கனியாகுளம் ஊராட்சி 7வது வார்டு பகுதியை இணைக்கும் சாலை ஆகும். இந்த சாலையில் நாகர்கோவில் டவுன் ரயில்வே நகர் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலை இரண்டு நிர்வாகத்திற்கும் இடைப்பட்ட பகுதி என்பதால் குப்பைகள் வாங்க தூய்மை பணியாளர்கள் வருவதில்லை.

இதனால் கனியாகுளம் ஊராட்சி 7வது வார்டு பகுதி சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு மாத கணக்கில் குப்பைகள் அள்ளாமல் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசி சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டது. குப்பையால் நாய் தொல்லை, கொசு தொல்லை, துர்நாற்றம் போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் இது குறித்து தினதமிழில் செய்தி வெளியானது.

செய்தியை அறிந்த நாகர்கோவில் (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா அப்பகுதி மக்கள் நலன் கருதி இன்று சம்பவ இடத்திற்கு ஆய்வு மேற்கொண்டார். மேயர் வருகையை அறிந்த அப்பகுதி மக்கள் மேயரிடம் தங்கள் பிரச்சனையை எடுத்து கூறினார்கள். சுகாதாரமற்ற நிலையில் இருந்த அந்த பகுதியை பொது மக்கள் நலன் கருதி உடனே தூய்மை செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இது அப்பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

மாநகராட்சி மற்றும் ஊராட்சி எல்கை பிரச்சனையால் சுகாதாரமற்ற நிலையில் இருந்த அந்த பகுதியை தூய்மை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது மட்டுமின்றி இந்த பகுதியை தூய்மையாக வைக்க கனியாகுளம் ஊராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தார்.
பொதுமக்கள் சாலைகளில் குப்பைகளை வீசாமல் தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க மேயர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும் தூய்மையான மாநகரை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

ரூ. 25 லட்சம் கேட்டு கல்வி நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான மனநலம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
இறந்து கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை
அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்.
மாபெரும் தெருமுனைப் பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

எஸ் ஐ மகனுக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி

March 1, 2025
65 Views
குமரி கண்ணாடி இழை பாலத்துக்கு செல்ல
பச்சைமால் தனது நட்சத்திர பிறந்த நாள்
ஒற்றுமை, சகோதரத்துவம் வலுப்படுத்தும் காலமாக அமைய வேண்டும்; விஜய் வசந்த் எம்.பி
கோவையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account