நாகர்கோவில், ஜுன் 29 –
கரூர் எம்எல்ஏ விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை குறித்து அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் கூறியதாவது: அதிமுகவிலிருந்து ஆறாவது எம்எல்ஏவாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் தொகுதி எம்எல்ஏ. மேலும் செந்தில் பாலாஜியின் எதிர்துருவம். சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் தவெக இரண்டாவது இடத்தை பிடித்திருந்தாலும் கூட , வெற்றி பெறவில்லையே என்கிற ஏக்கம் தவெகவினருக்கு இருக்கத்தான் செய்கிறது. இதற்கு வசமாக மாட்டிக்கொண்டவர் தான் எம்.ஆர்.வி என்று சொல்லலாம்.
தவெகவுடன் இணைப்பினை கரூரில் வைத்து கொள்ளலாமா? இல்லை பனையூரிலேயே நடத்தி விடலாமா என்பது தான் எம்ஆர்வி மனதில் இப்போது ஓடிக் கொண்டிருக்கிற கேள்வியாக இருக்கும். அது தான் முதலமைச்சரே சில நாட்களில் கரூருக்கு விசிட் அடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறதே. ஒரேயடியாக இணைப்பு விழாவினை கரூரில் நடத்திட வேண்டியது தானே. எது எப்படியோ தவெக ஆட்டம் மட்டும் ஜோராகவே இருக்கிறது. அடுத்து எந்த எம்எல்ஏ என்று யோசிக்கும் அளவுக்கு தவெக அரசியல் சென்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.



