தருமபுரி, ஆக. 11 –
தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அவசர ஆலோசனை கூட்டம் அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார்.
மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, 2026 சட்டமன்ற தேர்தலில் தருமபுரி, பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறுவது, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணியில் அனைவரும் ஈடுபட்டு முழு அளவில் பணியை மேற்கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், மாவட்டச் துணை செயலாளர் ரேணுகாதேவி, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் தங்கமணி நன்றி கூறினார்.



