தருமபுரி, ஜூலை 25 –
தருமபுரியில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாரதிபுரம் பகுதியில் அவர் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: தருமபுரி தர்மம் தலைத்த ஊர், தருமபுரியில் சிறந்த சிற்பக்கலை கொண்ட அற்புதமான கோவில்கள் உள்ளன. மனிதன் தோன்றிய போது தர்மம் தொடங்கி விட்டது. தர்மம் தேசத்திற்கு முக்கியமான விஷயம் ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாப்பது தர்மம் நாம் சுவிட்சமாகவும், சந்தோஷமாகவும், திருப்தியாகவும், இணக்கமாகவும் வாழ தர்மம் அவசியம் மனித வாழ்க்கையில் இன்பம், நல்லொழுக்கம் ஏற்பட தர்மம் அவசியம் காஞ்சி காமாட்சி 32 தர்மங்களை காத்து அறம் வளர்த்த நாயகியாக காட்சி தருகிறார்.
அன்பே சிவம் ஆசை இயற்கையானது ஆனால் அது முறையானதாக இருக்க வேண்டும். தர்மம், பக்தி ஆகியவை குழந்தை பருவத்தில் இருந்து வரவேண்டும். தருமபுரியில் சங்கடமடம் அமைக்க முயற்சி எடுத்துள்ளனர். இந்த முயற்சி சிறப்பாக நிறைவேறும் நல்ல குணம் நமக்கு நல்ல பழக்க வழக்கத்தை தருகிறது அனைத்து உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும். அனைவரையும் நேசிக்க வேண்டும் நற்செயல்களையும், புண்ணியத்தையும் செய்ய வேண்டும். மனித மனம் கருணையுடன் இருக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர்.



