தருமபுரி, அக்டோபர் 24 –
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டம் பாட்டாளி இளைஞர் சங்க மாநிலச் செயலாளர் முருகசாமி தலைமையில் பூபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார். இளைஞர் சங்க மாநிலச் செயலாளர் செந்தில், மாநில துணைச் செயலாளர்கள் சிவக்குமார், சத்தியமூர்த்தி, கோவிந்தசாமி, கோவிந்தராஜ், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பெரியசாமி, கிழக்கு மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பாட்டாளி இளைஞர் சங்கத் மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கணேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினர். மாவட்டத்தில் நீர்வளம் பெருக காவேரி உபநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். வன்னியர்களுக்கு 15 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தில் கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், தமிழ்நாடு உழவர் பேரிக்க மாநிலச் செயலாளர் வேலுசாமி, கட்சியின் மாநில துணைத்தலைவர்கள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், பசுமை தாயக மாநில துணைச் செயலாளர் மாது, மாநில நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சுதா கிருஷ்ணன், நம்பிராஜன், ராமலிங்கம், அன்பழகன், பாலகிருஷ்ணன் மற்றும் இளைஞர் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.



