தென்காசி, ஏப்ரல் 29 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மாங்குடி கிராமத்தில் தமிழ் கவிஞர்கள் தினத்தை முன்னிட்டு மாங்குடி மருதனார் நினைவுத் தூணிற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் தமிழ் கவிஞர்கள் நாள் ஏப்ரல் திங்கள் 29ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மாங்குடி என்னும் சிற்றூரில் அமைந்துள்ள தமிழுக்கு தொண்டாற்றிய சங்ககாலப் புலவர்களில் ஒருவராகிய மாங்குடி மருதனார் நினைவுத் தூணுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் (திருநெல்வேலி மண்டலம்) இளங்கோ, உதவி இயக்குநர் கனக லெட்சுமி, சங்கரன்கோவில் வட்டாட்சியர் ஆதி நாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயலெட்சுமி, விஜய கணபதி, மாங்குடி மன்ற தலைவர் மலைக்கனி, தமிழறிஞர் நிலவழகன் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



