By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு வழி பாதை, வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு குறித்து கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு வழி பாதை, வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு குறித்து கலெக்டர் ஆய்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு வழி பாதை, வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு குறித்து கலெக்டர் ஆய்வு

Last updated: July 9, 2026 8:38 pm
July 9, 2026
13 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 9 –

தஞ்சாவூர் மாநகரில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க ஒரு வழி பாதை, வாகனம் நிறுத்துமிடம் குறித்து கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்.

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சனி ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கமான நாட் களை விட பல மடங்கு அதிகரித்து வருகிறது. இவர்கள் கார், வேன்கள் பஸ்களில் வருவதால் பெரிய கோவிலுக்கு எதிரே உள்ள வாகனம் நிறுத்துமிடம் நிரம்பி விடுவதால் பழைய கோர்ட் சாலை, மருத்துக் கல்லூரி சாலை, சீனிவாசபுரம், இராச மிராசுதார்அரசு மருத்துவ மனை சாலையோரங்களில் கார்கள், வேன்கள், பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.

மேலும் தஞ்சாவூர் பெரிய கோவில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்படி நெரிசல் ஏற்படும்போது பஸ்கள் பழைய கோர்ட்டு சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது. இதனால் பெரிய கோவில் சாலை மட்டுமின்றி காந்திஜி சாலை, பழைய கோர்ட்டு சாலையும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தஞ்சாவூர் மாநகரில் முக்கியமான பகுதிகளான பழைய பஸ் நிலையம், தஞ்சாவூர் பெரிய கோவில், காந்திஜி சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தேவையான இடங்களில் புதிய ரவுண்டாக்களை உருவாக்கவும் போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்தவும் புதிய முயற்சியாக ஒரு வழிப்பாதைகளை உருவாக்கவும், தேவையான இடங்களில் வாகன நிறுத்தும் இடங்களை மேம்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகம், சோழன் சிலை, ஆயுதப்படை மைதானம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர் ரேவதி போக்குவரத்து துறை, போலீஸ் துறை, மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் நித்யா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் கீதா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.50,000 பறிமுதல்
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் ஒரு கிலோ 400 கிராம் தங்கம் கொள்ளை: குழித்துறை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை
விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஆக செந்தில் குமார் நியமனம்
கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
கொட்டாரம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பயணம் இளைஞர் மன்றம் சார்பில் நடந்த 42-வது ஆண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

August 19, 2025
35 Views
தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 10 மசோதா
தர்மபுரியில் அரசு, தனியார் பள்ளிகளில் அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் வழங்கினார்
நாகர்கோவிலில் போலி நகையை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி: 3 பேருக்கு வலை
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account