திருப்பத்தூர், ஆக. 4 –
திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மல்லபள்ளி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி, அக்ரஹாரம் ஊராட்சியில் சமுதாய நீர் சேகரிப்பு குளம் அமைக்கும் பணி, புத்தாகரம் ஊராட்சியில் சமுதாய சுகாதார வளாக கட்டிடம் கட்டும் பணி, சாலை அமைக்கும் பணி ஆகிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சோலையார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மல்லபள்ளி ஊராட்சியில் ஊராட்சி சாலை பராமரித்தல் திட்டத்தின் கீழ், ரூ.8.47 இலட்சம் மதிப்பீட்டில் அன்னசாகரம் முதல் நாயுடு வட்டம் வரை 460 மீட்டர் நீளத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். இந்து ஆய்வின்போது சாலையின் பக்கவாட்டு மண் உறுதிப்படுத்தும் (Side Berm Consolidation) பணி மட்டும் நிலுவையில் இருந்தது. அப்பணியையும் உள்ளடக்கி அனைத்து நிலுவைப் பணிகளையும் ஒரு வார காலத்திற்குள் நிறைவு செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, அக்ரஹாரம் ஊராட்சியில் வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் (VBGRAM.G)சமுதாய நீர் சேகரிப்பு குளம் அமைக்கும் பணிக்கு முன் அளவீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரத்துடன் விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர், புத்தாகரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 15 ஆவது மத்திய நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் (கிராம ஊராட்சி) ரூ.5.85 இலட்சம் மதிப்பீட்டில், சமுதாய சுகாதார வளாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டிடத்தின் பிளாஸ்டரிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,
வெள்ளையடிக்கும் (White Wash) பணியை உடனடியாக தொடங்கவும், கதவு மற்றும் ஜன்னல்கள் பொருத்தும் பணிகள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சாய்வுதளம் மற்றும் கைப்பிடி (Handrail) அமைக்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்து நிலுவைப் பணிகளையும் 15 நாட்களுக்குள் நிறைவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, புத்தாகரம் ஊராட்சியில் நபார்டு கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (NABARD RIDF 2026-27) திட்டத்தின் கீழ், ரூ.47.16 இலட்சம் மதிப்பீட்டில் மங்னூர் முதல் கோணபட்டு வரை சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலையின் பக்கவாட்டு மண் உறுதிப்படுத்தும் (Side Berm Consolidation) பணி மட்டும் நிலுவையில் இருந்ததை ஆய்வு செய்து, அனைத்து நிலுவைப் பணிகளையும் ஒரு வார காலத்திற்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தினார்.
இவ்வாய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, உதவி செயற்பொறியாளர் மஞ்சுநாதன், சோலையார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெமணவாளன், உபாலமுருகன், உதவி பொறியாளர் ரஷாதபசும் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.



