சென்னை, ஜூன் 22 –
சோசலிஸ்ட் ஜனதா கட்சியின் சார்பாக மத்திய அரசின் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றத்தை திரும்பப் பெறக்கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை இளஞ்சிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் லோகநாதன் வரவேற்புரை ஆற்றினார். மற்றும் பாவலர் மு.ராமச்சந்திரன், டி.சிவஞானசம்பந்தன், வழக்கறிஞர்கள் எம்.எல்.ரவி, கா.கி.மூர்த்தி, கரு.சந்திரசேகரன், வேலு சுபராசர், கவிஞர் குருத்தோலை, மருதுபாண்டியர், இராஜேந்திரன், தேன் மொழி, எஸ்.கலையரசி, ஆர்.தனசேகரன், பொன்.ஆபேல் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மூத்த துணைத்தலைவர் எம்.டி.ராமலிங்கம் நன்றி கூறினார்.



