சேலம், ஜூலை 28 –
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு ஆடி 18 நாளான 03.08.2026 திங்கட்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி உள்ளூர் விடுமுறை செலாவணி முறி சட்டம் – 1881- ன் கீழ் வராது என்பதால் அரசின் பாதுகாப்புக்கான மற்றும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு அன்று மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கும்.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு பின்வரும் 22.8.2026 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறினார்.


