தருமபுரி – 19.08.2026
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சித்தேரி மலை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தினை மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார் .புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துகள் , நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் பதிவு விவரம், பதிவுகளில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து மருத்துவ பணியாளர்களிடம் ஆட்சியர் கேட்டு அறிந்தார். மேலும் தீவிர சிகிச்சை பிரிவு, அவசர காலப்பிரிவு, இயல் முறை சிகிச்சை பிரிவு ,எலும்பு முறிவு சிகிச்சைகள் பிரிவு, பொது மருத்துவம் பெண்கள், விஷ முறிவு சிகிச்சைகள் மற்றும் விஷ முறிவு சிகிச்சைகளுக்கான மருந்துகள் இருப்பு உள்ளிட்ட பிரிவுகளை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.



