தென்காசி, செப். 27 –
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் ஹரி பிரியாணி நிறுவனர் ஹரிஹர செல்வன் பொதுமக்களின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் மூன்று ஆம்புலன்ஸ் சேவைகளை துவங்கி வைத்தார். ஆம்புலன்ஸ் சேவைகள் குறைவாக உள்ள இடங்களான சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் ஆகிய மூன்று ஊர்களில் உள்ள பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மூன்று ஆம்புலன்ஸ் சேவையை துவங்கி உள்ளார்.
ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் முன்று ஆம்புலன்ஸ்களை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, தெட்சிணமாற நாடார் சங்கத் தலைவர் காளிதாசன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் கணேஷ் தாமோதரன், பொய்கை மாரியப்பன், கோல்டன் பீடி செல்வராஜ், தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் லூர்து நாடார் மற்றும் ஹரிஹர செல்வன் குடும்பத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



