ஈரோடு, ஜூலை 17 –
சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் அனுமதியின்றி தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருவதாகவும் இதனால் மலைப்பகுதியில் சுற்று சூழல் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சட்ட விரோதமாக செயல்படும் விடுதிகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து முதல் கட்டமாக புலிகள் காப்பகத்தில் உள்ள 42 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தாளவாடி ஆசனூர் தலமலை கேர்மாளம போன்ற ஊராட்சிகளில் செயல்பட்டு வந்த மேலும் 21 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டன. ஆக மொத்தம் புலிகள் காப்பகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 63 விடுதிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டன.


