கோவை, பிப். 23 –
கோவை காந்திபுரம் பகுதியில் வசிக்கும் சித்தாபுதூர் சிஎம்சி காலனி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூய்மை பணியாளர் குடியிருப்பு சங்க குழு தலைவர் பி.முருகேசன் தலைமையில் 87 ஆண்டு காலமாக நாங்கள் அங்கு வசித்து வருகிறோம்.
பலமுறை பல இடத்தில் பல ஆண்டுகளாக கோவை மாவட்ட ஆட்சியாளர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகளிடம் நாங்கள் மனுக்களை கொடுத்தோம். அதற்கு எந்த ஒரு பதிலும் எங்களுக்கு சரிவர கிடைக்கவில்லை. ஆகையால் சென்னை தலைமைச் செயலகம் சென்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடமும், துறை சார்ந்த அதிகாரிகளிடமும் எங்களது மனுவை கொடுத்தோம்.
அங்கு இருந்த தலைமைச் செயலாளர் திரு முருகானந்தம் அவர்களிடம் நேரில் சென்று எங்களது மனுவை கொடுத்து எங்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அவரும் எங்களது கோரிக்கையை கேட்டறிந்து துறை சார்ந்த அதிகாரி முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் அவர்களிடம் சந்திக்க வைத்தார். பின்னர் அவரிடமும் எங்களது மனுவை கொடுத்து எங்களது கோரிக்கை வைத்தோம். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட அதிகாரி உங்களுக்கு உடனடியாக இது சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி நல்ல முடிவை தருகிறோம் என்று கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ராமசாமி, பொருளாளர் ரங்கசாமி, ஆலோசகர் பாபு மற்றும் சங்க உறுப்பினர்கள் சரஸ்வதி, நாகராஜ், பத்மாவதி, வானதி சரோஜா, மணிகண்டன், சக்திவேல், பாக்கியராஜ், லட்சுமி, பண்ணாரி, அம்மாசை, ஆறுமுகம் ஆகியோர் இருந்தனர்.



