கோவை, ஜூன் 01 –
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் ரூ.301 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பெரியார் அறிவுலகம் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ், அரசு முதன்மைச் செயலாளர் பொதுப்பணித்துறை ஷுன்சொங்காம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், முதன்மை தலைமைப் பொறியாளர் மணிவண்ணன், தலைமைப் பொறியாளர் கோவை ரங்கநாதன், கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் செல்வராஜ் பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் உட்பட பலர் உள்ளனர்.



