குளச்சல், டிச. 1 –
குளச்சல் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (51). அரசு போக்குவரத்துக் கழக குளச்சல் பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை இவர் குளச்சலில் இருந்து மார்த்தாண்ட செல்லும் அரசு பஸ்ஸை ஓட்டி சென்றுள்ளார். ரீத்தாப்புரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தார். அப்போது கருங்கல் பகுதியை சேர்ந்த அஜி (29) என்பவர் வேகமாக ஓட்டி வந்து பைக்கை பஸ்ஸின் பின்பக்கம் மோதி உள்ளார். இதன் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து சந்திரசேகர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அஜி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அஜி குளச்சல் இரும்பிலி பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார்.


