கிருஷ்ணகிரி, மே 21 –
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் இரு மாணவிகள் 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். தருணிகா அருள் மற்றும் மகிமா ஆகிய இரு மாணவியர் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தனர். மாணவி வினிதா 496 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவிகள் கிருபா ஸ்ரீ மற்றும் தணிகாஸ்ரீ 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
பள்ளியில் முதலிடம் பெற்ற மகிமா பாட வாரியாக தமிழ்– 98, ஆங்கிலம் – 99, கணிதம் – 100, அறிவியல் – 100, சமூக அறிவியல் – 100 என 497 மதிப்பெண்களும், தருணிகா அருள் பாட வாரியாக தமிழ் – 98, ஆங்கிலம் – 99, கணிதம் – 100, அறிவியல் – 100, சமூக அறிவியல் – 100 என 497 மதிப்பெண்கள் பெற்றனர். இரண்டாம் இடம் பெற்ற வினிதா பாட வாரியாக தமிழ் 98 ஆங்கிலம் 99, கணிதம் – 99, அறிவியல் 100, சமூக அறிவியல் -100 என 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் 500க்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் 45 மாணவ, மாணவியர் பெற்றுள்ளனர். பாடவாரியாக தமிழ் பாடத்தில் 90 மதிப்பெண்களுக்கு மேல், 42 மாணவ, மாணவியரும், ஆங்கிலத்தில், 90 மதிப்பெண்களுக்கு மேல், 70 மாணவ, மாணவிகளும், கணிதத்தில் 100 மதிப்பெண்கள் 40 மாணவ, மாணவியரும், 90 மதிப்பெண்களுக்கு மேல் 25 மாணவ, மாணவியரும், அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண்கள் 16 மாணவ, மாணவியரும், 90 மதிப்பெண்களுக்கு மேல் 80 மாணவ, மாணவியரும், சமூக அறிவியிலில் 13 மாணவ. மாணவியர், 100 மதிப்பெண்களும், 90 மதிப்பெண்களுக்கு மேல் 56 மாணவ, மாணவியரும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பள்ளியின் நிறுவனர் மணி பரிசுகள் அளித்து பாராட்டி பேசினார். தாளாளர் கிருஷ்ணவேணி மணி, பாரத் கல்வி அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் சந்தோஷ், முதல்வர் நசீர் பாஷா மற்றும் துணை முதல்வர் பெரியண்ணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.



