நாகர்கோவில், ஏப். 16 –
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுவதையொட்டி 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று (16.04.2026) நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிநவீன பிரம்மாண்ட வண்ண பலூனை பறக்கவிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள், தேர்தல் நாள், மாவட்ட தேர்தல் இலட்சினை உள்ளிட்டவைகள் பொறிக்கப்பட்ட அதிநவீன பிரமாண்ட வண்ண பலூணில் பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தொடக்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், உதவி திட்ட இயக்குநர்கள் துறை அலுவலர்கள், பொதுமக்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



