நாகர்கோவில், ஜூன் 22 –
கருங்கல் அருகே உள்ள பாலூர் பகுதியை சேர்ந்தவர் அன்பு மோகன்ராஜ் மகன் ஆலன் மேக்ஸ்வெல். இவர் தற்போது பள்ளி படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்க தயாராகி வருகிறார். அப்போது நாகர்கோவில் தம்பத்து கோணம் பகுதியை சேர்ந்த பிரைட் தங்க சேவியர் என்பவர் என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார். அவர் மோகன் ராஜன் மனைவி ஷீபாவிடம் வெளிநாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் எளிதாக எம்பிபிஎஸ் சீட் வாங்கி தர முடியும் என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய ஷீபா தன் மகனின் மருத்துவக் கல்விக்காக ரூ. 7 லட்சத்து 54 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட பிரைட் தங்க சேவியர் மருத்துவ சீட்டு வாங்கி தராமல் ஏமாற்றி காலதாமதம் செய்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஷீபா தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அதனை திருப்பித் தராமல் பிரைட் தங்க சேவியர் ஏமாற்றி வந்தாக கூறப்படுகிறது.
இது குறித்து நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஷீபா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து, பிரைட் தங்க சேவியர் மற்றும் அவரது மகன் சயான் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். பிரைட் தங்க சேவியரை கைது செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


