கன்னியாகுமரி, மார்ச் 6 –
வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் (28). இவர் தனது நண்பரான செங்கோட்டையை சேர்ந்த காசி விசுவநாதன் (48) என்பவருடன் பைக்கில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மறுபடியும் பைக்கில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். பைக்கை பிரகாஷ்ராஜ் ஓட்டினார். அப்போது நான்கு வழிச்சாலையில் கார்மல் மாதா ஆலய சந்திப்பு பகுதியில் சென்றபோது ஒரு வழி பாதையில் தவறாக வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த பைக் பிரகாஷ்ராஜ் ஓட்டிய பைக் மீது மோதியது.
இதில் காசி விஸ்வநாதன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பிரகாஷ்ராஜ் மற்றொரு பைக்கில் அந்த கன்னியாகுமரி இரட்சகர் தெருவை சேர்ந்த ரெஜின் (26) ஆகியோர் காயங்கள் இன்றி தப்பினர். இதை அடுத்து காயம் அடைந்த காசி விஸ்வநாதன் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் ரெஜின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


