இரணியல், ஆக.22:
மேக்காமண்டபம் அருகே கடமலைகுன்று பகுதியைச் சேர்ந்த நேசமணி (55), திங்கள்நகர்–தலகுளம் சாலையில் ஹார்டுவேர் மற்றும் மூங்கில் கம்பு கடை நடத்தி வருகிறார். நேற்று அவர் பைக்கில் ஆரோக்கியபுரம் சானல் கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
ஆரோக்கியபுரம் பகுதியில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த ஓடைக்குள் பாய்ந்தது. இதில் பைக்கின் முன்பகுதி முழுவதும் ஓடைக்குள் சிக்கியது. விபத்தில் நேசமணிக்கு தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது.
அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்



