திருப்பூர், ஏப். 21 –
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை நோக்கிய பரபரப்பான சூழலில் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ச. காளிமுத்து வித்தியாசமான முறையில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இது பற்றி வேட்பாளர் கூறியதாவது: வேட்பாளராகிய நான் எனது கிராமத்தின் திட்டங்களை மனதில் வைத்து அதை வெளிப்படுத்தும் நோக்கில் தற்பொழுது வேட்பாளராக களம் கண்டுள்ளேன்.
எனது கிராமத்தை போலவே மற்ற கிராமமும் அடிப்படை வசதிகள் இன்றி இன்றளவும் இருக்கின்றது எந்த திட்டமும் வளர்ச்சி திட்டங்களாக கூறப்பட்டாலும் அது மக்களை சென்றடையாமலும் பயன்பாட்டில் இல்லாமலும் இன்றளவும் உள்ளது. இதனை வெளி கொண்டுவரும் நோக்கிலும் திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் நோக்கிலும் நான் செயல்படுவேன் என உறுதி அளிக்கிறேன்.
அப்துல் கலாம் ஐயா வழியில் கிராமங்களில் முன்னேற்றம் தான் நாடு முன்னேற்றத்திற்கான முதல் படி. ஆகவே நான் கிராமங்களில் இருந்தே என்னுடைய அரசியலை தொடங்குகிறேன் எனவும் கூறினார்.



