ஈரோடு, ஜூன் 16 –
கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர் சங்கம் மற்றும் தூய்மை காவலர்கள் சங்க மாநில தலைவர் ஈ வி கே சண்முகம் ஈரோடு ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ஒரு மனு கொடுத்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஊராட்சி தூய்மை பணியாளர் மற்றும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பல வருடமாக ஒரே ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை பணியிடம் மாற்றம் செய்து முறைகேடுகள் நடப்பதை தவிர்க்க வேண்டும்.சிறப்பு ஓய்வூதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியமாக ஒட்டுமொத்த தொகையாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனு கொடுக்கப்பட்டது.



