ஊத்தங்கரை, ஜூலை 17 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஊத்தங்கரை ஒருங்கிணைந்த நீதிமன்ற சமரச மையம் சார்பில் சார்பு நீதிபதி திருஞானசம்பந்தம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தரமூர்த்தி தலைமையில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவு பெற்றது.
இந்த பேரணியில் வாரத்தில் ஏழு நாட்களும் மாவட்ட மற்றும் வட்ட நீதிமன்றங்களில் சமரச மையம் செயல்படும் என்றும் நேரடியாகவோ அல்லது இணைய வழியிலாகவோ தரப்பினர் சமரசம் நாடலாம் என்றும் தேசிய அளவில் நடைபெறும் சிறப்பு சமரச முகாமில் பொதுமக்கள் 90 நாட்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளும் அறிவு வாய்ப்பு உள்ளது என்றும் நிலுவையில் உள்ள தங்களது வழக்குகளை நேரடியாகவோ அல்லது தங்கள் வழக்கறிஞர் மூலமாக என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



