ஈரோடு, செப்.18.
ஈரோடு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கபடி போட்டி நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றன.
கபடி போட்டியை நந்தா கல்விக் குழுமத்தின் உடற்கல்வி இயக்குநர்கள் லட்சுமணன், பாஸ்கரன், தேவகாந்தன், அரவிந்த், பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பிரபாகரன், ஈரோடு சட்டக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் மணி மற்றும் ஜெ.கே. முனிராஜா பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து நந்தா கலை அறிவியல் கல்லூரி மற்றும் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கபடி போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணி வீரர்களையும் சந்தித்து போட்டி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
போட்டியின் போது நடுவர்கள் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் உடனிருந்து போட்டியை முறையாக நடத்தினர். மாவட்ட அளவிலான இந்த விளையாட்டுப் போட்டிகள் மூலம் மாணவர்கள் மற்றும் இளம் விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.



