ஈரோடு, ஜூலை 30 –
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஈரோடு புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் வருகிற 31 ந் தேதி முதல் 12 நாட்கள் நடக்கிறது.
22வது ஆண்டாக நடக்கும் இந்த புத்தக திருவிழா குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறியதாவது: ஈரோடு புத்தகத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கல்லூரி மைதானத்தில் தொடங்குகிறது. தொடக்க விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் பள்ளிக்கல்வி தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜமோகன் கைத்தறி துணி நூல் மற்றும் காதித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகம் திருவிழா நடக்கும் அரங்கம் மற்றும் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பேசுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்குகிறார். மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குலசேகரன் வரவேற்று பேசுகிறார். பொது நூலக இயக்ககம் இயக்குனர் ஜெயந்தி, பத்ம பூசன் விருதாளர் எஸ்.கே.எம் மயிலானந்தன் எம்.எல்.ஏ.க்கள் ஆனந்தமோகன், சண்முகம், முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, பிரகாஷ் எம்.பி, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அரவிந்த் ஜெயின், ஈரோடு மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் மற்றும் பலர் முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
நிகழ்ச்சியையொட்டி நாளை முதல் நிகழ்ச்சி முடியும் வரை தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுகள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். அருகில் மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உள்ளார்.



