ஈரோடு, ஆக. 29:
இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) அங்கமான யங் இந்தியன்ஸ் (Yi) ஈரோடு கிளை சார்பில், ‘தளிர்கள்’ அமைப்பின் இணைப்பில் ‘இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026’ தெற்கு மண்டலப் போட்டி ஈரோட்டில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆகஸ்ட் 28, 29 ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தலைமைத்துவம், ஜனநாயக நெறிமுறைகள், நாடாளுமன்ற விவாத நடைமுறை மற்றும் பேச்சாற்றலை மாணவர்களிடம் வளர்க்கும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது.
JKKN கல்வி நிறுவனங்களின் அனுசரணையில் நடைபெற்ற போட்டியில், மாணவர்கள் பல்வேறு பொதுநலத் தலைப்புகளில் தங்களது கருத்துகளை முன்வைத்து விவாதங்களில் திறமையை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஜனநாயகத்தின் செயல்பாடுகள், இளைஞர்களின் பங்களிப்பு மற்றும் தலைமைத்துவத் திறன்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இப்போட்டி, மாணவர்களின் அறிவுத்திறன், பேச்சாற்றல் மற்றும் விவாதத் திறனை வெளிக்கொணர்வதுடன், நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தியது.



