ஈரோடு, செப். 9 –
ஈரோடு மாவட்டத்தில் 60 வயதிற்கு மேல் உள்ள முதியோர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் வழங்கி கட்டணம் மற்றும் இலவசமாகவும் இயங்கும் தனியார் முதியோர் இல்லங்கள் செயல்படுவதற்கு சமூக நலத்துறையின் கீழ் அனுமதி பெற்று இயங்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் இயங்கும் முதியோர் இல்லங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உரிமம் ஏதும் பெறாமல் இயங்கும் முதியோர் இல்லங்கள் உடனடியாக பதிவு மேற்கொள்வதற்கு வரும் 19 ந் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் 6-வது தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது. உரிமம் ஏதும் பெறாமல் ஈரோடு மாவட்டத்தில் முதியோர் இல்லங்கள் செயல்பட்டால் அது குறித்த விவரங்களை 2261405 என்ற தொலைபேசி எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.


