ஈரோடு, ஜூலை 16 –
ஈரோடு மாவட்டம் அசோகபுரம் – பவானி செல்லும் முக்கிய சாலையில் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மையத் தடுப்புச் சுவர் (Concrete Median Barrier) அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கனரக வாகனங்கள் மற்றும் கிரேன் உதவியுடன் கான்கிரீட் தடுப்புகள் சாலையின் நடுப்பகுதியில் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணியால் எதிரெதிர் திசையில் வரும் வாகனங்கள் தவறுதலாக மோதும் அபாயம் குறைவதுடன், போக்குவரத்து ஒழுங்கும் மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணிகள் நடைபெறும் பகுதிகளில் வாகன ஓட்டிகள் வேகத்தை கட்டுப்படுத்தி, போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து,. பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, அசோகபுரம் – பவானி சாலையில் விபத்துகள் குறைவதோடு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் சீரான போக்குவரத்து வசதியுடனும் பயணிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



