ஈத்தாமொழி, மே. 11-
ஈத்தாமொழி பருதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே செல்லும்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென அந்தப் பெண் அணிந்திருந்த தங்க தாலி சங்கிலியை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக சத்தம் போட்டு உள்ளார்.
சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு கூட்டம் கூட்டியதை தொடர்ந்து, நகையை பறிக்க வந்த மர்ம நபர்கள் செயினை முழுமையாக பறிக்க முடியாமல் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர்.
இதனால் தாலி செயின் அதிர்ஷ்டவசமாக தப்பியது. இந்த சம்பவம் குறித்து ஈத்தாமொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்து மர்ம நபர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


