நாகர்கோவில், செப். 27 –
நாகர்கோவில் தலைமை அலுவலக வளாகம் முன்பு நவராத்திரியை முன்னிட்டு அஞ்சல் ஊழியர்கள் அனைவரும் இணைந்து இந்திய அஞ்சல் துறை மக்களுக்கு வழங்குகிற சேவைகளை பிரதிபலிக்கும் வகையில் கொலு ஏற்பாட்டினை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க. செந்தில் குமார் தலைமையில் செய்திருந்தனர். இந்த கொலு நிகழ்ச்சியினை மகளிர் கிறித்தவ கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் பார்வையிட்டனர். அஞ்சல் துறை பற்றியும் அஞ்சல் துறை மக்களுக்கு வழங்குகின்ற சேவைகள் பற்றியும் அஞ்சல் ஊழியர்கள் சிறப்பான முறையில் எடுத்துரைத்தனர்.
பின்பு அஞ்சல் துறை சேவைகள் சம்பந்தமாக நடத்தப்பட்ட வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை நாகர்கோவில் தலைமை அஞ்சலக அதிகாரி சுரேஷ்குமார் வழங்கினார். பின்பு மாணவிகளிடம் கடிதம் எழுதும் பழக்கத்தினை மீள் உருவாக்கம் செய்திடும் நோக்கில் கடிதம் எழுதும் போட்டியும் நடத்தப்பட்டது. அனைத்து போட்டிகளிலும் மாணவிகள் வெகு ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஷீஜா, பிரின்சி மற்றும் அஞ்சல் துறையை சார்ந்த அலுவலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



