வேலூர், செப்.14:
வேலூர் மாவட்டம் அரசமரபேட்டை பெருமாள் கோயில் வீதியில் 22ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் கந்த விநாயகர் வடிவில் விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவில் சாதனை பரவைகள் அண்ட் கோவில் அட்டி குரூப்ஸ் நண்பர்கள், விழா குழுவினர்கள் மற்றும் அரசமரபேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.



